top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

தம்மின் மெலியாரை நோக்கி

Updated: Nov 29, 2021

29/11/2021 (279)

மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து பொச்சாப்பால் கெட்டாரை உள்ளுக என்று, அதாங்க நம்மிடம் மிதப்பு தலை தூக்கும் போது இந்த மாதிரி தலைக்கணம் கொண்டு கடமையைச் செய்ய மறந்து அழிந்தவர்களை கொஞ்சம் நினைத்து பாரு – தெளிவு பிறக்கும் என்றார் நம் பேராசான் குறள் 539ல்.


இது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொன்று இருக்கு. தமக்கு கொடுக்கப்பட்ட அருட்கொடைகளுக்காக நாம் மகிழ்ச்சி கொள்ளனுமாம். (மிதப்பு கூடாது என்பது கூறாது கூறல் - paralipsis). இங்கே மகிழ்ச்சி என்பது நிம்மதி.


“மயக்கமா கலக்கமா

மனதிலே குழப்பமா, வாழ்க்கையில் நடுக்கமா

உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு…” கவியரசு கண்ணதாசன்; சுமைதாங்கி திரைப்படம் (1962)*


1330 குறள்களையும் சுருக்கி 102 வெண்பாக்களால், குமரகுருபர சுவாமிகளால், 17ஆம் நூற்றாண்டில் அருளப்பட்டது “நீதிநெறி விளக்கம்” எனும் நூல். அதில் ஒரு பாடல்:


தம்மின் மெலியாரை நோக்கித் தமது உடைமை

அம்மா பெரிது என்று அகம் மகிழ்க; -தம்மினும்

கற்றாரை நோக்கிக் கருத்து அழிக, கற்றது எல்லாம்

எற்றே இவர்க்கு நாம் என்று” --- நீதி நெறி விளக்கம்; குமரகுருபர சுவாமிகள்


பொருள்: பெற்றது போதும் என்று அகம் மகிழ்க; கற்றது போதாதென்று மேலும் கற்க


பொச்சாவாமைக்கு அடிப்படை இந்த இரண்டுதான். 1. செல்வச் செருக்கு செல்லாது; 2. கல்விச் செருக்கும் கூடாது


இப்படி இருந்தால் என்ன நடக்கும்ன்னு கேட்கறீங்களா?


எல்லாம் நடக்குமாம். சொல்கிறார் நம் வள்ளுவப் பெருந்தகை.


நாளை தொடரலாம்.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.





*1962 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் கவியரசரால் தயாரிக்கப்பட்டது, இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள்


35 views6 comments

6 bình luận


Thanks a lot for the wonderful addition.

Thích

balasundara_raja
30 thg 11, 2021

மறக்க மறக்க, தீயன மறக்க..

அன்பன் ராஜ்


Thích
Phản hồi lại

சிறப்பு. நன்றி

Thích

Comment from my friend Arumugam "பெற்றது போதும் என்று மகிழ்ச்சி கொள்.கற்றது போதாதென்று மேலும் கற்க. நல்ல அறிவுரை.

போதும் என்ற மனமே பொன்செய்யயும் மருந்து. கற்றது கையளவு. கல்லாதது உலகளவு."

Thích
Phản hồi lại

thanks a lot

Thích

Yes Poet Avvayyar also said Katrathu Kai Mann Alavu, Kallathathu Ulagalavu. Einstein also said the same. If some one gets this "Kalvi cherukku" he/she will stop learning and will be certainly doomed. For sure One should be " Contented " and Only exception could be "Knowledge". Also one should be grateful may be that is what Dale Carnegie meant when he said COUNT YOUR BLESSINGS. Along with "cherukkus... material and education ..I would think some get CHERUKKU out of the status/position they occupy in the organisation or society. I think people should realise that ones status .Positions are very Temporary and highly transient in nature.

Thích
bottom of page